கணவனை கொன்று ஏரியில் வீசிய மனைவி
குருநாகல் கிரிபாவ பகுதியில் கணவனை கொலை செய்தாக சந்தேகிக்கப்படும் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் கிரிபா – சரகன்வ பகுதியைச் சேர்ந்த உதய குமார (வயது – 32) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கணவனை கொலை செய்துவிட்டு, இரவில் சடலத்தை தோளில் சுமந்து சென்று மேல் கிரிபா ஏரியில் வீசியதாக மனைவி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சந்தேக நபரான மனைவி, கணவரின் கழுத்தை நெரித்து சடலத்தை தோளில் சுமந்து 150 மீற்றர் தூரம் வரை சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை சந்தேகத்தின் பேரில் 33 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்