கிழக்கு மாகாணத்தில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்று திங்கட்கிழமை வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறித்த பகுதிகளில் 36 முதல் 37 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெப்பநிலையானது 2 வாரங்களுக்கு எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும் வெப்பநிலையானது அதிகரிக்கக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்