Tag: தினக்குரல் பத்திரிகை

  • அதிகரிக்கும் மலேரியா காய்ச்சல்

    அதிகரிக்கும் மலேரியா காய்ச்சல்

    இலங்கையில் மலேரியா மீண்டும் அதிகரித்து வருவதாகவும், சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய நபர்களிடம் இது கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

    மலேரியா எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஆலோசகர் சமூக மருத்துவர் வைத்தியர் புபுது சூலசிறி கூறினார்.

    மலேரியா மீண்டும் வருவதைத் தடுக்க இலங்கை ஒரு வலுவான திட்டத்தை பராமரித்து வருகிறது, பயணிகள் இந்த நோயுடன் திரும்புவதற்கான தொடர்ச்சியான ஆபத்தை அங்கீகரித்துள்ளது.

    இலங்கையில், 2023 இல் 62 மலேரியா நோயாளிகள் இருந்தனர், ஒரு மரணம் ஏற்பட்டது, அதே நேரத்தில் 2024 இல் 38 வழக்குகள் மற்றும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது. 2025 இல் இதுவரை 14 வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

    உலக சுகாதார அமைப்பு (WHO) செப்டெம்பர் 2016 இல் இலங்கையை மலேரியா இல்லாததாக சான்றளித்தது, உள்நாட்டு பரவலை நீக்குவதில் அதன் வெற்றியை ஒப்புக்கொண்டது,” என்று டாக்டர் சூலசிறி மேலும் கூறினார்.

    மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

     

  • கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த தென் கொரிய கப்பல்

    கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த தென் கொரிய கப்பல்

    தென் கொரிய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

    தென் கொரியாவில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை வருகைதந்த குறித்த கப்பலைக் கடற்படை மரபுகளின் படி இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.

    149.5 மீற்றர் நீளம் கொண்ட இந்தக் கப்பல், 262 பணியாளர்களைக் கொண்டுள்ளது.

    கப்பலில் வருகை தந்தவர்கள் நாட்டின் சுற்றுலா தளங்களைப் பார்வையிடவுள்ளதுடன், நாளையதினம் குறித்த கப்பல் நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.

    மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

  • 16 வயது மாணவன் தலைக்கவசத்தால் தாக்கி கொலை:  11 பேர் கைது

    16 வயது மாணவன் தலைக்கவசத்தால் தாக்கி கொலை: 11 பேர் கைது

    குருணாகல் பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக நண்பர்கள் தலைக்கவசத்தால் தாக்கியதில் காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

    ஹெவன்பொல, செக்கரலியா தோட்டம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.

    இதன்போது அரபோல கந்த மற்றும் அம்பகோட்டே பகுதிகளைச் சேர்ந்த 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

    வெலிகெதர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெவன்பொல பகுதியில் ஏப்ரல் 16 ஆம் திகதி மாணவர்கள் குழு மற்றொரு மாணவனை அடித்து, உதைத்து, தலைக்கவசங்களைப் பயன்படுத்தி தாக்கியதாகக் கூறப்படுகிறது.

    பலத்த காயமடைந்த பாதிக்கப்பட்ட மாணவன் குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிர் இழந்துள்ளார்.

    சடலம் குருநாகல் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

  • டேன் பிரியசாத் கொலை: மூவர் கைது

    டேன் பிரியசாத் கொலை: மூவர் கைது

    துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் கொலை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    வெல்லம்பிட்டிய – சாலமுல்ல பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

  • யுக்ரைனில் பேருந்து மீது ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல்: 9 பேர் பலி

    யுக்ரைனில் பேருந்து மீது ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல்: 9 பேர் பலி

    யுக்ரைனில் பேருந்து ஒன்றின் மீது ரஷ்யா மேற்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

    யுக்ரைனின் தெற்கு-மத்திய நகரமான மர்ஹானெட்ஸ் பகுதியில் இன்று காலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இந்த தாக்குதலில் 30 பேர் காயமடைந்துள்ளதாக யுக்ரைன் தெரிவித்துள்ளது.

    போர்நிறுத்தம் தொடர்பிலான கலந்துரையாடல்கள் நடைபெற்றுவரும் நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

  • தமிழ் தேசிய பேரவைக்கே எமது ஆதரவு: யாழ். முஸ்லிம் மக்கள் ஒன்றியம்

    தமிழ் தேசிய பேரவைக்கே எமது ஆதரவு: யாழ். முஸ்லிம் மக்கள் ஒன்றியம்

    தேசிய மக்கள் சக்தியின் பொறிக்குள் வீழாது காலச் சூழலுக்கு ஏற்ப தமிழ் தேசியப் பரப்பில் பயணிக்கும் கட்சிகளுடன் ஒன்றிணைந்து
    பயணிக்கும் நோக்கில் இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய பேரவைக்கு ஆதரவை வழங்கவுள்ளதாக யாழ்.முஸ்லிம் மக்கள் ஒன்றியம் தலைவர் அப்துல் பரீக் ஆரீப் தெரிவித்துள்ளர்.

    நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் பேரவைக்கு ஆதரவு வழங்கும் அறிவிப்பை விடுத்திருந்த யாழ்.முஸ்லிம் மக்கள் ஒன்றியம் அது தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை இன்று புதன் கிழமை யாழ் ஊடக மையத்தில் மேற்கொண்டு இவ்வாறு கூறியிருந்ததுடன் மேலும் கூறுகையில்,

    அகில இலங்கை தமிழ் காங்கிரசுடன் யாழ் முஸ்லிம் மக்களுக்கு நெருங்கிய தொடர்பும் நட்பும் இருந்துவருகின்றது.

    அதுமட்டுமல்லாது கொள்கையில் தடுமாறா நிலையுடன் பயணிக்கும் கஜேந்திரகுமார் தலைமையிலான கட்சி எமது மக்களின் நலன்களில் அதிக அக்கறையுடன் பயணித்து வருகின்றது.

    இவ்வாறான நிலையில் காலத்தின் சூழ்நிலைக்கேற்ப கொள்கையுடன் தமிழ் தேசிய பேரவை இருக்கின்றது.

    அதனடிப்படையில் இம்முறை நடைபெறும் உள்ளூராட்சி தேர்தலில் எமது அமைப்பின் ஆதரவை தமிழ் தேசிய பேரவைக்கு வழங்குவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்த அவர் தமது முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு ஆதரவை வழங்கவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

    குறித்த ஊடக சந்திப்பின் போது யாழ்.முஸ்லிம் மக்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் M.S.ரஹீம் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

  • மாத்தறை சிறைச்சாலையிலிருந்த கைதிகள் இடமாற்றம்

    மாத்தறை சிறைச்சாலையிலிருந்த கைதிகள் இடமாற்றம்

    மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து 26 பெண் கைதிகள் உட்பட 200 கைதிகள் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு இன்று புதன் கிழமை மாற்றப்பட்டுள்ளனர்.

    மாத்தறை சிறைச்சாலையில் ஏற்கனவே 506 கைதிகள் உள்ளதாகவும் அதில் தற்போது 200 பேர் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

    மாத்தறை சிறைச்சாலையில் 3 கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு முற்பட்டபோது அவர்களுடன் தங்கியிருந்தவர்கள் அதற்கு எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

    குறித்த அமைதியின்மை சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.

    தற்போது நிலைமை முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

    மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

  • ஜம்மு, காஷ்மீர் தாக்குதல்: சந்தேக நபர்களின் உருவப்படம் வெளியீடு

    ஜம்மு, காஷ்மீர் தாக்குதல்: சந்தேக நபர்களின் உருவப்படம் வெளியீடு

    இந்தியாவின் ஜம்மு, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    தாக்குதலில் காயம் அடைந்த மற்றும் தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இந்தியாவின் ஜம்மு, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் உயிரிழந்தனர்.

    மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

  • உலக புத்தக தினம்

    உலக புத்தக தினம்

    உலக புத்தக தினம் 

    முன்னுரை

    உலக நூல்கள் தினம் (World Book Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 23 அன்று கொண்டாடப்படும் ஒரு சிறப்புநாள். இது வாசிப்பு, எழுத்து, பதிப்பகம் மற்றும் காப்புரிமையை முன்னிறுத்தும் ஒரு உலகளாவிய விழாக்கிழமை.

    உலக புத்தக தினம்

    உலக நூல்கள் தினம் 2025 – முக்கிய தகவல்கள்

    தேதி: ஏப்ரல் 23, 2025

    துணைக்கொள்கை: நூல்கள் மூலம் அறிவையும் சமாதானத்தையும் உருவாக்கல்

    நிறுவனம்: யுனெஸ்கோ (UNESCO)

    முக்கிய நோக்கம்: வாசிப்பு மற்றும் எழுத்தாளர் பணிக்கு மதிப்பளித்தல்

    உலக புத்தக தினத்தின் வரலாறு

    முதன்முதலாக 1995 ஆம் ஆண்டு யுனெஸ்கோ இதை அறிவித்தது.

    ஏப்ரல் 23 அன்று உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் வில்லியம் ஷேக்ஸ்பியர், செர்வாண்டஸ் ஆகியோர் மறைந்த தினம் என்பதால் இது தேர்ந்தெடுக்கப்பட்டது.

    நூல்கள் – அறிவின் கதவுகள்

    வாசிப்பின் மூலம் சிந்தனை வளர்ச்சி, ஆளுமை மேம்பாடு, மொழி திறன் மற்றும் மன அமைதி ஏற்படுகின்றன.

    ஒரு நல்ல புத்தகம் வாழ்வை மாற்றும் சக்தி கொண்டது” என்பது உண்மை.

    உலக புத்தக தினம்

    வாசிப்பின் 10 நன்மைகள் (Benefits of Reading)

    1. மன அழுத்தம் குறைபடும்

    2. நினைவாற்றல் அதிகரிக்கும்

    3. மொழி மற்றும் சொல்வளம் பெருகும்

    4. ஆன்மிக நலம் மேம்படும்

    5. தனிமையை வெல்லும்

    6. கற்பனை திறன் விரிவடையும்

    7. வாழ்வியல் சிந்தனைகள் மேம்படும்

    8. மனக் கவனிப்புத் திறன் உயரும்

    9. இலக்கியத்தின் மீது நாட்டம் உருவாகும்

    10. நேரத்தை பயனுள்ளதாகச் செலவிட முடியும்

     

    டிஜிட்டல் யுகத்திலும் புத்தகங்கள்

    eBooks, Audiobooks, PDFs, Podcasts மூலம் வாசிப்பு இன்று எளிமையாக மாறியுள்ளது.

    Mobile apps (Storytel, Pocket FM, Tamil Books App) வாசிப்பை ஊக்குவிக்கின்றன.

    வாசிப்பை பழக்கமாக்க 10 வழிகள்

    1. தினசரி வாசிப்புக்கான நேரம் ஒதுக்கவும்

    2. சுருக்கமான புத்தகங்களில் தொடங்குங்கள்

    3. வாசித்ததைப் பகிரவும்

    4. புத்தக நோட்ஸ் எடுக்கவும்

    5. டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தவும்

    6. வாசிப்பை சாதனையாக எண்ணுங்கள்

    7. சுவாரஸ்யமான எழுத்தாளர்களை தேர்ந்தெடுக்கவும்

    8. வாசிப்பு கிளப் ஒன்றில் இணையவும்

    9. வீட்டிலேயே நூலகம் அமைக்கவும்

    10. குழந்தைகளுக்கு வாசிப்பை பழக்கப்படுத்தவும்

    உலக புத்தக தினம்

    புத்தகங்கள் மற்றும் மனநலம்

    வாசிப்பு மூலமாக மன அழுத்தம் குறைவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன.

    குறிப்பாக ஆன்மிகம், தன்னம்பிக்கை, நேர்மறை சிந்தனை சார்ந்த புத்தகங்கள் மன நலனுக்கு உதவுகின்றன.

    முடிவுரை

    உலக புத்தக தினம் என்பது ஒரு சிறப்பான நம்பிக்கையை நமக்குத் தருகிறது – “வாசிப்பின் வழியே அறிவு வளர்க்கலாம், அறிவின் வழியே உலகத்தை மாற்றலாம்.” இந்த நாளை நாம் ஒவ்வொருவரும் ஒரு புத்தக வாசிப்புடன் தொடங்கினால், வாசிப்பு புரட்சி சாத்தியமே!

    உலக புத்தக தினம்

    மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

     

    • Beta

    Beta feature

    • Beta

    Beta feature

    • Beta

    Beta feature

    • Beta

    Beta feature

    • Beta

    Beta feature

    • Beta

    Beta feature

    • Beta

    Beta feature

  • வத்திக்கான் பயணமானார் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

    வத்திக்கான் பயணமானார் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

    கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானுக்கு பயணித்துள்ளார்.

    மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனையில் பங்கேற்பதற்காக பேராயர் அங்கு சென்றுள்ளார்.

    பாப்பரசர் பிரான்சிஸின் மறைவையொட்டி வெற்றிடமாகியுள்ள பாப்பரசர் பதவிக்கான மாநாட்டில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

    மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்