ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான சர்வதேச தினத்தினை முன்னிட்டு வீதி நாடகம்

-கிரான் நிருபர்-

கல்வி அமைச்சின் வழிகாட்டலுக்கமைவாக ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான சர்வதேச தினத்தினை முன்னிட்டு வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் விழப்புணர்வு வீதி நாடகம் நடைபெற்றன.

ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான சர்வதேச தினம் செப்டெம்பர் 16 ஆம் திகதி முதல நாடு பூராகவும்; கொண்டாடப்படுகிறது.இது 1987 ஆம் ஆண்டு சுற்றுச் சுழலுக்கான மாண்ட்ரீல் நெறிமுறையில் உலக நாடுகள் கையெழுத்திட்டதை மையமாகக் கொண்டு செயற்படுத்தப்படும் தினமாகும்.

பூமியின் வளிமண்டலத்திலுள்ள வாயுக்களின் மெல்லிய படை அடுக்கான ஓசோன் அடுக்கை பாதுகாப்பது சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சர்வதேச ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவிகளால் பொலித்தின் பாவனையை கட்டுப்படுத்தல், வழிமண்டலத்தில் ஏற்படும் பாதிப்பு தொடர்பாகவும் அதனை தடுக்க எவ்வாற வழிமுறைகளை பின்பற்றவேண்டும் என்ற விழிப்புணர்வு வீதி நாடகம் மாணவர் மத்தியில் நிகழத்தி காட்டப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்