மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை: ஒருவர் கைது
-பதுளை நிருபர்-
மஹியங்கனை, தொடம்வத்த பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் இன்று ஞாயிற்று கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹியங்கனை தொடம்வத்த பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் போதைப்பொருள் மற்றும் மாத்திரைகளை தம் கைவசம் வைத்திருந்ததாகவும் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகாமையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸ் முகவரை நியமித்து ஐஸ் போதைப்பொருள் கொள்வனவு செய்யும் போர்வையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது 360 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 200 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இந்த போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டாரா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்