
பாடசாலைகளுக்கு விடுமுறை
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின், மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்று வியாழக்கிழமையுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, நாளை முதல் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதிவரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம், ஜனவரி 2 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது