Last updated on April 28th, 2023 at 03:24 pm

பாடசாலை விடுமுறை தொடர்பில் புதிய அறிவிப்பு

பாடசாலை விடுமுறை தொடர்பில் புதிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

2022 ஆம் ஆண்டில் அரச பாடசாலைகள் மற்றும் அரசாங்க அனுசரணை பெற்ற தமிழ் – சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி 6 ஆம் திகதி திங்கட்கிழமையுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்துப் பாடசாலைகளுக்குமான மூன்றாம் தவணைக்கான மூன்றாம் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி 20 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172