காட்டு யானை தாக்கியதில் முதியவர் மரணம்

-பதுளை நிருபர்-

கிராதுருக்கோட்டை பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை காட்டு யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலக்கம் 64 பேரியல் சந்தி கிராதுருகோட்டை பகுதியை சேர்ந்த 82 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேரியல் சந்தி பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் தனது வீட்டிற்கு வெளியே வந்த போது காட்டு யானை தாக்கிய நிலையில் குறித்த நபர் உயிர் இழந்துள்ளார்.

சடலம் தற்போது அவ் இடத்திலேயே நீதிவான் விசாரணைகளுக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையின் பின்னர் மஹியங்கனை வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை கிராந்துருகோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்