Last updated on April 28th, 2023 at 05:13 pm

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நவம்பர் இறுதியில்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நவம்பர் இறுதியில்

2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை நவம்பர் மாதம் வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் எதிர்பார்க்கிறது.

பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள்களுக்கான மதிப்பெண்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாடு முழுவதும் 3,844 பரீட்சை நிலையங்களில் மே மாதம் நடைபெற்றது.

பரீட்சைக்குத் தோற்றிய 517,486 மாணவர்களில் 407,129 பேர் பாடசாலை மாணவர்களும் 110,367 பேர் தனியார் பரீட்சார்த்திகளும் ஆவர்.