மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்து : வெளிநாட்டு சுற்றுலா பயணி காயம்

-பதுளை நிருபர்-

பண்டாரவளை உடுஹுல்பொத்த பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டேனிலி யா என்டெல் (67 வயது) என்ற அமெரிக்க பிரஜையே இவ்வாறு காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்

இச்சம்பவத்தினால் அவரது வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவர் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்