உயர் தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதில் பல சிக்கல்கள்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகுவதற்கு முன்னர் உயர் தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதில் பல சிக்கல்கள் நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகுவதற்கு முன்னர் உயர் தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்வைத்த யோசனைக்கு அமைய, அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

தற்போது கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி வரும் மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்