
ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிப்பு
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன் சில பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கிரமாஆர மற்றும் உருமுத்தா ஓயா ஆகிய ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால் கம்புருபிட்டிய பகுதியில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
பத்தென்வெல பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
