துப்பாக்கி சூட்டுக்கு ஒருவர் பலி

லுணுகம்வெஹர பகுதியில் வீடொன்றில் வைத்து ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த 37 வயதுடைய நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.

மின்சாரம் இல்லாத நேரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளதாகவும், கொலையாளி உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்