
15 வயது பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம் : 20 வயது இளைஞன் கைது
மொறவக்க பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 20 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் (NCPA) அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாலியல் துஷ்பிரயோகத்தின் வீடியோ காட்சிகள் குறித்த பாடசாலை அதிபர் உட்பட பலருக்கு வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டதை அடுத்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது இல்லத்தில் வைத்து 11 தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்ற பின்னர் சந்தேகநபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்பான வெளிப்படையான பாலியல் விஷயங்களை தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த வீடியோ காட்சிகளை அவர் தனது நண்பர்கள் மற்றும் பாடசாலை அதிபர் உட்பட பலருடன் வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் மொரவக்க நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள அதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமி சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
