மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு : நெருக்கடியில் எரிபொருள் நிலையங்கள்

-அம்பாறை நிருபர்-

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதன்கிழமை  இரவு முதல் பெற்றோல் எரிபொருளை மக்கள் பெறுவதற்கு எரிபொருள் நிலையங்களுக்கு வருகை தந்ததை காண முடிந்தது.

கடந்த காலங்களில் கியூ.ஆர் முறைமையினால் சீராக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விநியோகம் திடிரென இவ்வாறு நெருக்கடிக்குள்ளானமை மக்கள் மத்தியில் சிறு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மக்கள் கடந்த காலங்களில் எரிபொருள் நிலையத்தை சூழ ஒன்று கூடியவாறு நிற்பதையும் அதிகளவான வாகனங்கள் எரிபொருள் நிலையங்களை நாடி செல்வதையும் காண முடிகின்றது.

மேலும் நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதே வேளை சாய்ந்தமருது மருதமுனை பகுதிகளில் பெற்றோல் இன்மையினால் பொதுமக்கள் திரும்பி செல்வதுடன் டீசல் எரிபொருள் சீராக இப்பகுதிகளில் விநியோகிக்கப்படுகின்றது.