
-யாழ் நிருபர்-
மணல் ஏற்றியவாறு நிறுத்தாது பயணித்த டிப்பர் மீது நேற்று செவ்வாய் கிழமை பிற்பகல் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கிளிநொச்சி – குடமுருட்டி பகுதியிலிருந்து அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றியவாறு பூநகரி நோக்கி ரிப்பர் வாகனம் பயணிப்பது தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த ரிப்பர் வாகனத்தை மறித்து சோதனையிட பொலிசார் முயற்சித்த போது நிறுத்தாமல் பயணித்த நிலையில் குடமுருட்டி பகுதியில் வைத்து பொலிசார் வாகனத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, சாரதிக்கு உதவியாக பயணித்த நபர் கால்ப் பகுதியில் சிறு காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
