முன்னாள் ஜனாதிபதி மைத்ரிக்கு எதிரான தடை நீடிப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை இம்மாதம் 29ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகள் இருந்தால் மனு தாக்கல் செய்யுமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதி, குறித்த வழக்கை இம்மாதம் 29ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்கு உத்தரவிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன, சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, உப தலைவர் பைசர் முஸ்தபா உள்ளிட்டோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்