பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல் 5 பேர் கைது

பல்கலைக்கழக மாணவர்களிடையே இடம்பெற்ற மோதலில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் களணி பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தைச் சேர்ந்த 5 மாணவர்களை கைது செய்துள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் மனிதயே பீடத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தகராறில் தாக்கப்பட்ட மாணவன் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்