பண்டாரவளை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் மோதல்: 4 பேர் படுகாயம்

-பதுளை நிருபர்-

பண்டாரவளை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் நேற்று செவ்வாய் கிழமை பிற்பகல் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் தனியார் பேருந்து சாரதிகளுக்கும் நடத்துனர்க்கும் இடையே ஏற்பட்ட வாய் தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியதில் 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேர அட்டவணை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதமே மோதல் ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்