இலங்கையின் முறைசாராத முன்பள்ளிகளால் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிப்பு

இலங்கையில் நிலவும் முறைசாராத முன்பள்ளி முறைமையால், நாட்டிலுள்ள பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படலாம் என கொழும்பு பல்கலைக்கழக கல்வி உளவியல் பிரிவின் தலைவர் சிந்தக சந்திரகுமார தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

”நாடு முழுவதும் முன்பள்ளி முறையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாடத்திட்டம் இல்லை. ஒழுங்காகக் கற்பிக்கப்படும் பாலர் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்ப பெற்றோர்கள் தயங்குகின்றனர்.

பாலர் பள்ளி கணிதங்களைக் கற்பிப்பதில்லை, ஆனால் குழந்தையின் திறன்களை வளர்க்கிறது.

அந்த வகையில் திறன்களை வளர்க்கும் முன்பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பதில் பல பெற்றோர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

அதன் காரணமாக முன்பள்ளிகளுக்கு முறையான கல்வித் திட்டம் இருக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பது அவசியம்.

ஒரு குழந்தை முன்பள்ளிக் கல்வியைப் பெறுவது மிகவும் அவசியம்“ என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்