சட்டவிரோத கசிப்பு நிலையம் முற்றுகை

-மூதூர் நிருபர்-

திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சின்னக் குளம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையம் சம்பூர் பொலிஸாரினால் நேற்று சனிக்கிழமை இரவு முற்றுகையிடப்பட்டது.

இதன் போது 1 இலட்சத்து 50 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா, 1500 மில்லி லீற்றர் கசிப்பு போன்றவற்றுடன் 58 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை சம்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் எதிர்வரும் 31 ஆம் திகதி மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்