மனைவியை தீ வைத்து கொன்ற கணவன் : தீக்காயங்களுடன் கைது

அவிசாவளையில்  மனைவியை தீயிட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேதவத்தை பிரதேசத்தில் கடந்த 24ஆம் திகதி கொட்டுவில பாடசாலைக்கு முன்பாக குறித்த தம்பதியினருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவர், மனைவியையும் கட்டியணைத்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், சிகிச்சை பெற்றுவந்த 44 வயதான மனைவி நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

சிகிச்சை பெற்று வரும் 54 வயதுடைய கணவரை வெல்லம்பிட்டிய பொலிஸார் கைது செய்யதுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்