இலங்கை இராணுவத் தளபதி ஒருவர் கூகுள் மற்றும் யூடியூப் மீது வழக்கு தாக்கல்
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, தனக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான வீடியோக்களை பகிர்ந்ததற்காக தனிநபர் மற்றும் இரண்டு அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் இராணுவத் தளபதியினால் நேற்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த துஷார சாலிய ரணவக்க மற்றும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான கூகுள் மற்றும் அதன் ஒன்லைன் வீடியோ பகிர்வு தளமான யூடியூப் ஆகியோர் மீது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தனது வழக்கைத் தாக்கல் செய்த இராணுவத் தளபதி, பிரதிவாதிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்புமாறும், அவதூறான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் மேலும் பரப்பப்படுவதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்குமாறும், நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்