மட்டக்களப்பிலிருந்து சென்ற தனியார் சொகுசு பேருந்து விபத்து

குருநாகல் மெல்சிறிபுற பிரதேசத்தில் இன்று புதன் கிழமை அதிகாலை இரண்டு சொகுசு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் பலர் காயமடைந்து அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்தும் கொழும்பிலிருந்து திருகோணமலை சென்ற தனியார் பேருந்துமே இவ்வாறு ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதியுள்ளது.

இரு பேருந்துகளினதும் அதிவேகமே விபத்துக்குக்காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது பேருந்து சாரதியே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்