மாணவ முதல்வர்களுக்கான சின்னஞ் சூட்டும் நிகழ்வு

-யாழ் நிருபர்-

பரஞ்சோதி வித்தியாசாலையில் மாணவ முதல்வர்களுக்கான சின்னஞ் சூட்டும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

யாழ். நல்லூர் கோட்டத்திற்குட்படகோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்தின் மாணவ முதல்வர்களிற்கான சின்னஞ்சூட்டும் நிகழ்வு நேற்று காலை வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

வித்தியலய உப அதிபர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதில் சிரேஷ்ட மாணவர் தலைவருக்கான சின்னத்தினை வித்தியாலயத்தின் முதல்வர் அணிவித்தார், தொடர்ந்து உப அதிபர், சிரேஸ்ட ஆசிரியர்கள் சின்னங்களை அணிவித்தனர்.

இந்நிகழ்வில் வித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர், மாணவர்கள் கலந்து கொண்டனர்.