Last updated on April 28th, 2023 at 04:47 pm

இலங்கை சுங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல் | Minnal 24 News %

இலங்கை சுங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்

இலங்கைக்கு வரும் போது மற்றும் பயணிகள் பொருட்களை ஏற்றிச் செல்லும் முகவர் நிலையங்கள் மூலம் இலங்கைக்கு பொருட்களை கொண்டு வரும் போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்குமாறு சுங்க திணைக்களம் விமான பயணிகளுக்கு அறிவித்துள்ளது.

தங்கம், புகையிலை, மருந்து, அலங்காரச் செடிகள் போன்ற இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள பல பொருட்கள் மற்றும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பல பொருட்கள் விமானப் பயணிகளால் கடந்த சில தினங்களாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் சட்டவிரோதமாக கொண்டு வரப்படும் அனைத்து பொருட்களும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பறிமுதல் செய்யப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும், என இலங்கை சுங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.