
ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களுடன் இலங்கை தமிழரசுக் கட்சியினர் கலந்துரையாடல்
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுத் தலைவர், இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதர் மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சியினருக்கிடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை முற்பகல் இடம்பெற்றது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரன் ஆகியோர் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பின் போது பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) நீக்குதல் மற்றும் அதற்கான புதிய சட்ட வரைவு, மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துதல் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் மற்றும் சம உரிமை தொடர்பான விடயங்கள் குறித்து விரிவான மற்றும் பயனுள்ள கலந்துரையாடலாக அமைந்தது, என இரா சாணக்கியன் தெரிவித்தார்
