துவிச்சக்கர வண்டியில் புகையிரத கடவையை கடக்க முற்பட்டவர் புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழப்பு!

-கிளிநொச்சி நிருபர்-

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதய நகர் பகுதியில், புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம், நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

முதியவர் ஒருவர், துவிச்சக்கர வண்டியில் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போது, அனுராதபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்

கிளிநொச்சி-ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த, சபாபதி (வயது 82) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை, கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.