
போதைப்பொருள் கடத்திய பல நாள் மீன்பிடி படகு சிக்கியது
தெற்கு கடற்கரையின் ஆழ்கடலில் போதைப்பொருள் ஏற்றப்பட்ட இரண்டு பல நாள் மீன்பிடி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இரண்டு பல நாள் மீன்பிடி படகுகளிலும் சுமார் 270 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைக்பொருள் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சந்தேகிக்கப்படும் இரண்டு பல நாள் மீன்பிடி படகுகளும் தற்போது கரைக்கு கொண்டு வரப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
