இலங்கைக்கு உடனடி அவசர நிவாரணம் வழங்கிய அவுஸ்திரேலிய அரசாங்கம்

டித்வா புயல் காரணமாக பாதிப்பை எதிர்நோக்கியுள்ள இலங்கைக்கு உடனடி அவசர நிவாரணமாக அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒருமில்லியன் அவுஸ்திரேலிய டொலரை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த நிதியானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணமாக பயன்படுத்தப்படும் என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.