குற்ற செயலுடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைது செய்ய சென்ற வேளை பொலிஸாரை கண்டு ஓடிய இளம் குடும்பஸ்தர் அருகிலுள்ள வீட்டின் கிணற்றினுள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை 6.30 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 6ம் யூனிட் இராமநாதபுரம் ஆலடி பகுதிக்கு பொலிஸார் சென்றனர்.
பொலிஸார் வருவதை அறிந்த சந்தேக நபர் தப்பிச் செல்ல முற்பட்டு அங்கிருந்து ஓடிய வேளை அருகில் உள்ள வீடொன்றின் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 24 வயதுடைய இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.