-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 18 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் விசேட குற்றத் தடுப்புபிரிவினர் இன்று சனிக்கிழமை மேற்கொண்ட தேடுதலின் போது தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் கைவிடப்பட்ட வீட்டின் பின்புறமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கேரளா கஞ்சா தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
