தோப்பூர் -பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பாற்குட பவணி
-மூதூர் நிருபர்-
திருகோணமலை, தோப்பூர் -பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பாற்குடப் பவணி இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.
இவ் பாற்குடப் பவணியானது தங்கபுரம் தங்க விநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தை வந்தடைந்தது.
இதில் ஆயிரத்துக்கு மேற்பட்ட சைவ பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.
பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் இம் மாதம் 04 ஆம் திகதி ஆரம்பமாகி பாற்குடப் பவணியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.





