நுவரெலியா பொலிஸ் பிராந்திய புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கடமைகளை பொறுப்பேற்றார்!

நுவரெலியா பொலிஸ் பிராந்தியத்திற்கு புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. ஜி.பி.ஜே.எஸ். சந்திரசேகர பண்டார இன்று செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

நுவரெலியாவில் உள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று காலை 09 மணியளவில் இடம்பெற்ற சர்வமத தலைவர்களின் ஆசியுடன் நடைபெற்ற நிகழ்வில் புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதில் நுவரெலியாவில் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பிராந்திய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதுவரை நுவரெலியா பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய திரு.அனுருத்த பண்டார ஹக்மன பதவி உயர்வு பெற்றுச் சென்றமையால் அவருடைய பதவிக்கு திரு. ஜி.பி.ஜே.எஸ். சந்திரசேகர பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.