-அம்பாறை நிருபர்-
மீன் பிடிக்க குட்டைகளை இறைத்த சிறுவர்கள் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் உள்ள அம்பாறை – கல்முனை பிரதான வீதிக்கு அருகில் உள்ள குட்டை ஒன்றில் இன்று சனிக்கிழமை முற்பகல் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
தற்போது மீட்கப்பட்ட கைக்குண்டை செயலிழக்கச் செய்ய விசேட அதிரடி படையினரால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த குண்டை கண்டுபிடித்தவர்கள் 119 எனும் பொலிஸ் அவசர பிரிவுக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் கைக்குண்டை பார்வையிட்டதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.