-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி கரைச்சி – தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள பொது மயானத்தில் உள்ள மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக அப்பகுதியில் இருந்த பெறுமதி மிக்க நாவல் மரங்களை இரவு வேளைகளில் சட்டவிரோதமான முறையில் வெட்டி கடத்திச் செல்லப்படுவதாகவும், கிராமங்களிலும் மக்கள் குடியிருப்பு பகுதிகளிலும் வீடுகளில் மக்கள் வசிக்காத காணிகளிலும் இரவு வேளைகளில் மரங்கள் வெட்டப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் தருமபுரம் பகுதியில் மயானத்தில் உள்ள கல்லறைகளை இரவு வேளைகளில் உறவினர்களின் அனுமதி இன்றி உடைக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களிலும் இடம் பெறாது இருக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.