கிணற்றில் இருந்து 10 வயது சிறுவனின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – அச்சுவேலி, தோப்பு பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை 4:30 மணி அளவில் 10 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசடி, தோப்பு பகுதியை சேர்ந்த பிரதீபன் தச்ஷன் (வயது – 10) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் தோட்டத்தில் உள்ள கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் பொழுது, கிணற்றில் இருந்த கலர் மீன்களை பிடிக்க முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் வாளியினை கிணற்றில் விட்ட பொழுது கயிற்றில் கால் சிக்குண்டு கிணற்றுக்குள் விழுந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.