நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
சீரற்ற வானிலை காரணமான நாட்டின் சில பகுதிகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி மற்றும் அயகம பிரதேச செயலக பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.