
-யாழ் நிருபர்-
கிளிநொச்சி – உமையாள்புரம் பகுதியில் நேற்று புதன் கிழமை அரச பேருந்து மற்றும் வேன் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த அரச பேருந்தானது கிளிநொச்சி உமையாள்புரத்தில் வேன் ஒன்றை முந்தி செல்வதற்கு முயற்சித்த போது விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தின் போது பேருந்து மற்றும் வேனில் பயணித்தவர்களுக்கு எந்த சேதங்களும் ஏற்படவில்லை. இருப்பினும் வேன் பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.