11 மில்லியன் மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்படும் அபாயம்

பாகிஸ்தானில் 11 மில்லியன் மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆய்வில், பாகிஸ்தானில் பலர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில், பலுசிஸ்தான், சிந்து மற்றும் கைபர் பக்துன்க்வாவில் உள்ள 22 சதவீத மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறார்கள் என்றும், 1.7 மில்லியன் மக்கள் அவசர நிலையை எதிர்கொள்கிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.