விஜயபுரவில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
அம்பாறை – தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவின் விஜயபுர பகுதியில் நேற்று புதன்கிழமை மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெஹியத்தகண்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
விஜயபுர, தமனேவெல பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
குறித்த நபர் வயலில் நெல் விதைக்கும் போது மின்னல் தாக்கிய நிலையில் உயிர் இழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹியத்தகண்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.