வர்த்தக நிலையத்தை சோதனையிட சென்ற அதிகாரிகளை தாக்கிய இருவர் கைது
வர்த்தக நிலையத்தை சோதனையிட சென்ற அதிகாரிகளை தாக்கிய இருவர் கைது
குருநாகல் – கொகரெல்ல பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றைச் சோதனையிடுவதற்குச் சென்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் இருவர் அச்சுறுத்தப்பட்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியதுடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட வர்த்தக நிலையத்தின் உரிமையாளர், தற்போதும் சேவையில் இருக்கும் பொலிஸ் அதிகாரி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.