பேக்கரி தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு
களுத்துறை வடக்கு – வஸ்கடுவ பிரதேசத்தில் பேக்கரி தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மத்துகம – அகலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சம்பவதினத்தன்று, பேக்கரி உரிமையாளர் தனது தொழிலாளி பேக்கரி படிக்கட்டில் சடலமாக கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.