கிரான் பாலம் ஊடான பிரதான போக்குவரத்து தடை
-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதுடன் கிரான் தொப்பிக்கல கிரான் பாலம் ஊடான பிரதான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
கடந்த 27ஆம் திகதியிலிருந்து பெய்துவரும் மழை காரணமாக சில கிராமங்களுக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ள போதிலும் போக்குவரத்தினை பிரதேச செயலகமும் இராணுவமும் இணைந்து படகு சேவையினை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை 2025 இடைப்போக வேளாண்மை செய்கையும் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.