
-பதுளை நிருபர்-
பதுளை மஹியங்கனை வீதி 5 ஆம் கட்டைப் பகுதியில் இன்று காலை 8 மணியளவில் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் 39 பேர் காயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் மஹியங்கனைக்கு சுற்றுலா சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து இடம்பெறும் போது பேருந்தில் 36 மாணவர்களும் விரிவுரையாளர்கள் இருவரும்இ இராணுவ அதிகாரிகள் இருவரும் சாரதி உட்பட பேருந்தில் 41பேர் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் 39 பேர் வரை பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்
இவர்களுள் சிலர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


