25 மில்லியன் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

17

25 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இந்தியப் பயணி ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

இலங்கைக்கு ஐஸ் போதைப்பொருளை கடத்த முற்பட்டதற்காக மலேசியாவிலிருந்து வந்த இந்தியப் பயணி ஒருவரை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கை சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

மலேசியாவில் இருந்து UL 315 என்ற விமானத்தில் வருகை தந்த இந்திய பிரஜை பயணப் பொதியில் புடவைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 01 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 25 மில்லியன் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபரும் போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Sureshkumar
Srinath