இருபதுக்கு 20 கடினபந்து கிரிக்கெட் போட்டி

-மூதூர் நிருபர்-

பாலத்தோப்பூர் கிங்ஸ் லெவன் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட இருபதுக்கு 20 கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டித் தொடரின் இறுதிப் போட்டி சனிக்கிழமை மாலை தோப்பூர் அஷ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இவ் இறுதிப் போட்டியில் ஈஸ்ட் லங்கா மற்றும் புளுடைமன் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தியதில் ஈஸ்ட் லங்கா அணி வெற்றி பெற்று சம்பியனாக தெரிவாகி கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது.

இறுதிப் போட்டியில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கலந்துகொண்டு வெற்றி பெற்ற இரண்டு அணிகளுக்குமான கிண்ணத்தையும் காசோலைகளையும் வழங்கி வைத்தார்.

இதன் போது தொடராட்ட நாயகன், போட்டி நாயகன் ஆகியோர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்