திருகோணமலையில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனின் மக்கள் சந்திப்பு

-மூதூர் நிருபர்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வெருகல் -ஈச்சிலம்பற்று சிறி செண்பகநாச்சியம்மன் ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார்.

முதலில் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் சண்முகம் குகதாஸன்  அழைப்பின் பேரில் இவ் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பில் வெருகல் பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தவிசாளர் சுந்தரலிங்கம், உதவி தவிசாளர், ததிழ் தேசிய கூட்டமைப்பின் வெருகல் பிரதேச முக்கியஷ்தர்கள்,கோயில் நிருவாகத்தினர்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்