தக்காளியின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

நாட்டில் தக்காளியின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

பண்டாரவளை உட்பட பல பிரதேசங்களில் தக்காளி பயிர்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

தக்காளியின் விலை கிலோவுக்கு 10 முதல் 20 ரூபாய் வரை சரிவடைந்துள்ளதால் பயிர்களை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், சந்தையில் தக்காளி 80 முதல் 100 ரூபாய் வரையில் விற்கப்படுவதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்