அம்பேவல பண்ணைக்கு ஜனாதிபதி விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அம்பேவல பண்ணைக்கு நேற்று சனிக்கிழமை கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பண்ணையின் அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காகவே அவர் அங்கு சென்றிருந்தார்.

இதன் பின்னர் ஊழியர்களுடன் உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அம்பேவல பண்ணையின் பால் உற்பத்தித் துறையில் எட்டப்பட்டுள்ள படிப்படியான வளர்ச்சி மற்றும் தேசிய பொருளாதாரத்திற்கான அதன் பங்களிப்பையும் பாராட்டினார்.

பண்ணைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இதன்போது ஜனாதிபதி எடுத்துக்காட்டினார் என ஜனாதிபதி ஊடப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்